Thursday, 13 October 2016
மேகலையும் கொலுசும்.
தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ காப்பியம் பற்றிச் சொல்லப் போகிறேன் என்று எண்ணாதீர்கள். பெண்களின் ஆபரணங்கள் பற்றிச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. மிக சுவாரஸ்யமாக இருந்தது. மேகலை(ஓட்டியாணம்) மற்றும் காலில் அணியும் கொலுசு பற்றிய செய்திகள். அதனைப் பற்றித்தான் இப்போது பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
சங்க காலத்திற்கு முன்பு இனக்குழு சமூகமாக வாழ்ந்த காலத்தில், பெண்களை மிகப்பெரிய சொத்தாகக் கருதி இருக்கிறார்கள். ஏனெனில் பெண்களால் தான் இனக் குழுக்களை விருத்தி செய்ய முடியும். அதனால், பிற இனத்தவர்கள் கவர்ந்து செல்லாமல் இருக்க தாயானவள் பகலில் பெண்களின் இடுப்பில் ஒரு கயிறைக் கட்டி தனது இடுப்பிலே கையிலோ வைத்துக்கொண்டு வேலை செய்து இருக்கிறார்கள். இரவில் பெண்களின் காலில் கயிற்றைக் கட்டி அதனை காலுடன் இணைத்துக் கட்டிவிட்டு உறங்கி இருக்கிறார்கள். பின்னர், தகுந்த மணாளன் வந்த பிறகு காலில் உள்ள கயிற்றை அவிழ்த்து இருக்கிறார்கள். அழகின் பொருட்டு மணிகள் முத்துக்கள் கோர்த்து சிலம்பாக மாற்றம் பெற்று இருக்கலாம். இப்படி காலில் அணியப்பட்ட அணிகலன், சங்க காலத்தில் சிலம்புகழி நோம்பு என்னும் சடங்காகப் போற்றப்பட்டது. திருமணத்திற்கு முன்பு பெண்கள் காலில் சிலம்பு அணிந்து இருப்பார்கள். திருமணத்திற்கு முன்பு காலில் உள்ள சிலப்பைக் களைவது. இதனைச் சடங்காகக் கொண்டாடி இருக்கிறார்கள். இதற்கான சான்றுகளை சங்க இலக்கிய பாடல்களில் காணலாம்.
' என் சிறுமடத் தகுவி
சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர்.... (அகநானூறு 369) என்ற பாடலில் இதனைப் பற்றிய குறிப்புகளைக் காணலாம். இவ்வாறு சடங்காக இருந்த முறையானது பிற்காலத்தில் மறைந்துவிட்டது. பின்னர் விதவைகள், வயதானவர்கள் காலில் அணிவதில்லை என்ற நிலை சமூதாயத்தில் இருந்தது. தற்காலத்தில் காலில் அழகிற்காக அணியும், அணியாக குறியீடாக மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
இதே போன்று இடுப்பில் அணியும் கயிறானது பின்னர் பெண்களில் அழகிற்காக இடுப்பில் அணியும் அணியாகி, தற்காலத்தில் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான பதிவு
ReplyDelete