Thursday, 13 February 2025

 

பயணி -1

எப்போதாவது யாருமற்ற சாலையில் நடந்த அனுபவம் இருக்கா? இருந்தால் நீயும் என்னை ஒத்த ரசனையுடைவரே. யாருமற்ற சாலை, நான் மட்டும் தனிமையில் வாகனம் பற்றிய பயம் இல்லாமல் நானும் என் தனிமையும் மட்டுமான பயணம் இனிமையானது. இதை அனுபவித்தவர்களால் மட்டும் உணரமுடியும். சில உணர்வுகள் அலாதியானவை அதை வார்த்தைகளால் சொன்னால் உணர்வது கடினமானது. அப்படித்தான் பயணமும், நான் போனேன் என்பது வெறும் உடலால் அடைகின்ற இடம். மனதால் சில இடங்களில் தங்குவோம், சில இடங்களைவிட்டு வரமாட்டோம். இப்படி என் பயணம் விசித்தரமானவை என்று நானே நினைத்துக்கொள்கிறேன். திட்டமிட்டு பயணப்பதைக் காட்டிலும் திட்டமிடாமல் சில பயணம் தானாக அமைந்துவிடும்.                    

                                        (பயணம் அடுத்த பதிவில்)

 

No comments:

Post a Comment